டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம்


டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம்
x
தினத்தந்தி 14 Aug 2020 1:02 AM GMT (Updated: 14 Aug 2020 1:02 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


* கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ள இந்திய வில்வித்தை வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய பயிற்சி முகாம் புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் வருகிற 25-ந் தேதி தொடங்கி நடைபெறும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இந்த முகாமில் 16 வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

* ஜெர்மனி பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதன் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த ஜெர்மனி 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 191 ரன்கள் குவித்தது. பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடக்க ஜோடிக்கு எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஜானெட் ரொனால்டு 105 ரன்னும், கிறிஸ்டினா காக் 66 ரன்னும் விளாசினர். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரியா அணி 53 ரன்களில் சுருண்டு 138 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


Next Story