உலக கோப்பை குத்துச்சண்டை: 9 பதக்கம் வென்று இந்தியா 2-வது இடம்


உலக கோப்பை குத்துச்சண்டை: 9 பதக்கம் வென்று இந்தியா 2-வது இடம்
x
தினத்தந்தி 20 Dec 2020 10:38 PM GMT (Updated: 20 Dec 2020 10:38 PM GMT)

10 நாடுள் பங்கேற்ற உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடந்தது.

புதுடெல்லி, 

கடைசி நாளில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ உடல்எடை பிரிவு) 4-1 என்ற கணக்கில் ஜெர்மனியின் மாயா கிளைன்ஹான்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மனிஷ் (57 கிலோ பிரிவு) 3-2 என்ற கணக்கில் சக நாட்டவர் சாக்‌ஷியை வென்று தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். முந்தைய நாளில் இந்திய வீரர் அமித் பன்ஹாலுக்கு (52 கிலோ) தங்கப்பதக்கம் கிட்டியது. மூன்று நாட்கள் நடந்த இந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று மொத்தம் 9 பதக்கத்துடன் 2-வது இடத்தை பெற்றது. ஜெர்மனி அணி 16 பதக்கங்களுடன் (4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம்) முதலிடத்தை பிடித்தது. உலக குத்துச்சண்டையில் சாதித்த இந்திய வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ பாராட்டியுள்ளார்.

Next Story