பாய்மர படகு போட்டி: கடற்படை அணி முதலிடம்
இந்திய பாய்மர படகு சங்கம், ராயல் மெட்ராஸ் யாச் கிளப் சார்பில் யுனிபை கேப்பிட்டல் நிறுவனம் ஆதரவுடன் பாய்மர படகு போட்டி சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி துறைமுகத்துக்கு கடல் மார்க்கமாக சென்று திரும்பும் வகையில் நடத்தப்பட்டது.
சென்னை,
இந்திய பாய்மர படகு சங்கம், ராயல் மெட்ராஸ் யாச் கிளப் சார்பில் யுனிபை கேப்பிட்டல் நிறுவனம் ஆதரவுடன் பாய்மர படகு போட்டி சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி துறைமுகத்துக்கு கடல் மார்க்கமாக சென்று திரும்பும் வகையில் நடத்தப்பட்டது. 4 நாட்கள் நடந்த இந்த போட்டியில் லெம்னோக், பிரவீன் குமார், ஏ.என்.சுவாமி, சோனு ஜடால் ஆகியோர் அடங்கிய கடற்படை அணி முதலிடத்தை பிடித்தது. அபிலாஷ் டோமி, சின்னா ரெட்டி, அபிமன்யு பன்வார், விவேக் ஷான்பாக் ஆகியோர் அடங்கிய ராயல் மெட்ராஸ் யாச் கிளப் அணி 2-வது இடத்தை பெற்றது. பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ராணுவ தலைமை அதிகாரி புனீத் சதா, யுனிபை கேப்பிட்டல் நிறுவன தலைவர் சரத் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்கள்.
Related Tags :
Next Story