ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து வெற்றி ஸ்ரீகாந்த், காஷ்யப் வெளியேற்றம்


ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து வெற்றி ஸ்ரீகாந்த், காஷ்யப் வெளியேற்றம்
x
தினத்தந்தி 18 March 2021 5:35 AM GMT (Updated: 18 March 2021 5:35 AM GMT)

மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது.

பர்மிங்காம், 

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதலாவது சுற்றில் 21-11, 21-17 என்ற நேர் செட்டில் சோனியா சியாவை (மலேசியா) தோற்கடித்து வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். சிந்து 2-வது சுற்றில் லினே கிறிஸ்டோபெர்செனை (டென்மார்க்) எதிர்கொள்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இ்ந்தியாவின் காஷ்யப் 13-20, 20-22 என்ற நேர் செட்டில் நம்பர் ஒன் வீரரும், உலக சாம்பியனுமான கென்டோ மோமோட்டாவிடம் (ஜப்பான்) பணிந்தார். இதே போல் இந்திய முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் 11-21, 21-15, 12-21 என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் போராடி நுயேனிடம் (அயர்லாந்து) வீழ்ந்தார். அதே சமயம் பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி-சிக்கி ரெட்டி, ஆண்கள் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஆகிய இந்தியர்கள் தங்களது முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

முன்னதாக போட்டி சம்பந்தப்பட்ட ஒரு சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதாலும், அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டி இருந்ததாலும் போட்டியை தொடங்குவதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

Next Story