சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 March 2021 10:36 PM GMT (Updated: 25 March 2021 10:36 PM GMT)

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

சென்னை, 

இந்திய ஸ்குவாஷ் சம்மேளனம் சார்பில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 31-ந் தேதி வரை நடக்கிறது. 

இதில் இந்தியா, கனடா, எகிப்து, பிரான்ஸ், ஜப்பான், ரஷியா, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 50 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். கொரோனா பரவலுக்கு பிறகு இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இந்த சர்வதேச ஸ்குவாஷ் போட்டி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது.


Next Story