ஒலிம்பிக் தகுதி சுற்று மல்யுத்தம்: 2 இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு தகுதி


ஒலிம்பிக் தகுதி சுற்று மல்யுத்தம்: 2 இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 7 May 2021 2:23 AM GMT (Updated: 7 May 2021 2:23 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு கடைசி தகுதி சுற்றான உலக மல்யுத்த போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியாவில் நேற்று தொடங்கியது.

இதில் ஆண்களுக்கான 74 கிலோ உடல் எடைப்பிரிவின் தொடக்க சுற்றில் இந்திய வீரர் அமித் தன்கர் 6-9 என்ற புள்ளி கணக்கில் மால்டோவா வீரர் மிகைல் சாவாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் இந்த எடைப்பிரிவில் இந்தியாவின் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பு பறிபோனது. 97 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் சத்யவார்த் காடியன் 5-2 என்ற புள்ளி கணக்கில் புயர்டோரிகோ வீரர் இவான் அமாதோர் ரமோஸ்சை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இதேபோல் 125 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் சுமித் மாலிக் 3-2 என்ற புள்ளி கணக்கில் மால்டோவா வீரர் அலெக்சாண்டர் ரோமனோவை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.


Next Story