டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஜூடோ வீராங்கனை சுஷிலா தேவி தகுதி


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஜூடோ வீராங்கனை சுஷிலா தேவி தகுதி
x
தினத்தந்தி 26 Jun 2021 12:50 AM GMT (Updated: 26 Jun 2021 12:50 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஜூடோ வீராங்கனை சுஷிலா தேவி தகுதி பெற்றுள்ளார்.

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மணிப்பூரை சேர்ந்த 26 வயது ஜூடோ வீராங்கனை சுஷிலா தேவி தகுதி பெற்று இருக்கிறார். பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் 989 புள்ளிகளுடன் தரவரிசையில் ஆசிய மண்டல அளவில் 7-வது இடத்தை பிடித்து இருக்கும் சுஷிலா தேவி அந்த மண்டல கோட்டாவின் அடிப்படையில் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுள்ளார். இதனை சர்வதேச ஜூடோ சம்மேளனம் நேற்று உறுதி செய்து இருக்கிறது. ஆசிய மண்டலத்தில் இருந்து மொத்தம் 10 பேர் தகுதி பெற முடியும். அதில் ஒரு நாட்டுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும். சுஷிலா தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி கண்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.

Next Story