ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை போட்டி: முதல் சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வி


ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை போட்டி: முதல் சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வி
x
தினத்தந்தி 24 July 2021 11:42 AM GMT (Updated: 24 July 2021 11:42 AM GMT)

ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை போட்டியின், முதல் சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வியடைந்தார்.

டோக்கியோ, 

ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா நேற்று முடிவடைந்ததையடுத்து இன்று காலை முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை போட்டியின், வெல்டர்வெயிட் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வியடைந்தார். 60 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானிய வீரர் ஒஹாசவாவிடம் 5-0 என்ற கணக்கில் விகாஸ் கிருஷ்ணன் தோல்வியடைந்தார். போட்டியில் வெற்றிபெற்ற ஜப்பானிய வீரர் ஒஹாசவா அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப்-16க்கு முன்னேறி உள்ளார். 

Next Story