ஒலிம்பிக்: ஆண்கள் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்திய வீரர் தோல்வி


ஒலிம்பிக்: ஆண்கள் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்திய வீரர் தோல்வி
x
தினத்தந்தி 28 July 2021 3:44 AM GMT (Updated: 28 July 2021 3:44 AM GMT)

ஒலிம்பிக் ஆண்கள் வில்வித்தை தனிநபர் வெளியேற்றுதல் சுற்றில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வியடைந்து அடுத்தசுற்று வாய்ப்பை இழந்தார்.

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் வில்வித்தை தனிநபர் வெளியேற்றுதல் சுற்று நடைபெற்றது. 1-32, 1-16, 1-8 என மூன்று பிரிவுகளாக வெளியேற்றுதல் சுற்று நடைபெறும். 1-32 வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிபெறும் வீரர்கள் அடுத்த சுற்றான 1-16 வெளியேற்றுதல் சுற்றுக்கு முன்னேறுவார்கள். 1-16 வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிபெறும் வீரர்கள் அதற்கு அடுத்த சுற்றான 1-8 சுற்றில் மோதுவார்கள். 1-8 சுற்றில் வெற்றிபெறும் வீரர்கள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள். 

அந்தவகையில், ஆண்கள் வில்வித்தை தனிநபர் 1-32 வெளியேற்றுதல் சுற்று இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் தருண்தீப் ராய் உக்ரைன் வீரர் ஒலெக்சி ஹன்பின்சை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில், ஒலெக்சி ஹன்பின்சை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தருண்தீப் ராய் அடுத்த சுற்றான 1-16 வெளியேற்றுதல் சுற்றுக்கு
முன்னேறினார்.

இதையடுத்து, 1-16 வெளியேற்றுதல் சுற்றில் தருண்தீப் ராய் இஸ்ரேல் வீரர் இடலி ஷன்னி என்பவரை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இரு வீரர்களும் மாறிமாறி புள்ளிகளை கைப்பற்றினர். இறுதியில், தருண்தீப் ராயை 6-5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இஸ்ரேல் வீரர் இடலி ஷன்னி வெற்றிபெற்றார். இதனால், இந்திய வீரர் தருண்தீப் சிங் ஆண்கள் வில்வித்தை தனிநபர்
பிரிவில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்

Next Story