இந்திய பேட்மிண்டன் முன்னாள் வீரர் நந்து நடேகர் மரணம்


இந்திய பேட்மிண்டன் முன்னாள் வீரர் நந்து நடேகர் மரணம்
x
தினத்தந்தி 29 July 2021 3:52 AM GMT (Updated: 29 July 2021 3:52 AM GMT)

இந்திய பேட்மிண்டன் முன்னாள் வீரரான நந்து நடேகர் (வயது 88) மராட்டிய மாநிலம் புனேயில் வசித்து வந்தார். வயது முதிர்வால் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தனது வீட்டில் நேற்று மரணம் அடைந்தார்.

1956-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வாகை சூடிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற நந்து நடேகர் 100-க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர், இந்திய பேட்மிண்டன் சங்கம் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story