சென்னையில் வருகிற 29 முதல் மாநில நீச்சல் போட்டி


சென்னையில் வருகிற 29 முதல் மாநில நீச்சல் போட்டி
x
தினத்தந்தி 14 Sep 2021 10:40 PM GMT (Updated: 14 Sep 2021 10:40 PM GMT)

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 37-வது சப்-ஜூனியர் மற்றும் 47-வது ஜூனியர் பிரிவினருக்கான மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) நீச்சல் வளாகத்தில் வருகிற 29-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் வெற்றி பெறுபவர்கள் பெங்களூருவில் (அக்டோபர் 19-23) நடைபெறும் தேசிய சப்-ஜூனியர், ஜூனியர் போட்டிக்கான தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதேபோல் 75-வது மாநில சீனியர் நீச்சல் போட்டி இதே வளாகத்தில் அக்டோபர் 2, 3 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுபவர்கள் பெங்களூருவில் (அக்டோபர் 26-29) நடைபெறும் தேசிய சீனியர் நீச்சல் போட்டிக்கான தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 5 நாட்கள் நடைபெறும் மாநில நீச்சல் போட்டிகளில் சுமார் 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த தகவலை தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Next Story