உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவு: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி
இந்தியாவின் ஜோதி சுரேகா மற்றும் அபிஷேக் வர்மா ஜோடி தென் கொரியாவின் கிம் யுன்-ஹீ மற்றும் கிம் ஜாங்-ஹோவை 159-156 என்ற கணக்கில் வீழ்த்தினர்.
அமெரிக்கா
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் அமெரிக்காவின் யாங்க்டோன் நகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது .
இதில் இந்தியாவின் ஜோதி சுரேகா மற்றும் அபிஷேக் வர்மா ஜோடி தென் கொரியாவின் கிம் யுன்-ஹீ மற்றும் கிம் ஜாங்-ஹோவை 159-156 என்ற கணக்கில் வீழ்த்தினர்.
.
இதன் மூலம் நாளை நடைபெறும் இறுதி போட்டிக்கு ஜோதி சுரேகா-அபிஷேக் வர்மா ஜோடி தகுதி பெற்றுள்ளனர். நாளை நடைபெறும் இறுதி போட்டியில் இவர்கள் கொலம்பியாவின் சாரா லோபஸ் மற்றும் டேனியல் முனோஸ் ஆகியோரை எதிர் கொள்ள உள்ளனர்.
Related Tags :
Next Story