2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்


2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 13 Oct 2021 10:53 PM GMT (Updated: 13 Oct 2021 10:53 PM GMT)

2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்.

சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 93-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியை தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்.

இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.

Next Story