இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் :காலிறுதிக்கு முன்னேறினார் பிரனாய்


இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் :காலிறுதிக்கு முன்னேறினார் பிரனாய்
x
தினத்தந்தி 18 Nov 2021 6:53 PM GMT (Updated: 18 Nov 2021 6:53 PM GMT)

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ் பிரனாய் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்

பாலி, 

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 32-வது இடம் வகிக்கும் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான விக்டர் ஆக்சல்செனை (டென்மார்க்) சந்தித்தார்.

முதல் செட்டை இழந்த பிரனாய் அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி பெற்று ஒலிம்பிக் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தார். 1 மணி 11 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் பிரனாய் 14-21, 21-19, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். விக்டர் ஆக்சல்செனை பிரனாய் வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்..

Next Story