புரோ கபடி:தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 Dec 2021 7:24 PM GMT (Updated: 31 Dec 2021 7:24 PM GMT)

நேற்றைய போட்டியில் புனேரி பால்டனை வீழ்த்தியது.

பெங்களூரு,

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. 

இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பால்டனுடன் மல்லுகட்டியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் 8-வது நிமிடத்துக்குள் எதிரணியை ஆல்-அவுட் செய்து அசத்தியதுடன் முதல் பாதியில் 18-11 என்று வலுவான முன்னிலை பெற்றது. அதன் பிறகு அடுத்தடுத்து புள்ளிகளை சேகரித்த புனே அணியினர் 17-18 என்று நெருங்கினர். அதைத் தொடர்ந்து சுதாரித்து மீண்ட தலைவாஸ் வீரர்கள் மேலும் புள்ளிகளை குவித்ததுடன் முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டனர். 

முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 36-26 என்ற புள்ளி கணக்கில் புனேயை தோற்கடித்தது. தலைவாஸ் அணியில் அதிகபட்சமாக அஜிங்யா பவார் 11 புள்ளிகளும், மஞ்ஜீத் 8 புள்ளிகளும் எடுத்தனர். 4-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது முதலாவது வெற்றியாகும். புனேக்கு 3-வது தோல்வியாகும். இன்றைய லீக் ஆட்டங்களில் யு மும்பா- உ.பி. யோத்தா (இரவு 7.30 மணி), பெங்களூரு புல்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8.30 மணி), தபாங் டெல்லி-தமிழ் தலைவாஸ் (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story