புரோ கபடி: நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு, அரியானா அணிகள் வெற்றி


புரோ கபடி: நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு, அரியானா அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 2 Jan 2022 9:52 PM GMT (Updated: 2 Jan 2022 9:52 PM GMT)

புரோ கபடி லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு, அரியானா அணிகள் வெற்றி பெற்றன.

பெங்களூரு, 

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. 

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பெங்களூரு புல்ஸ் அணி 40-29 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தியது. முதல் பாதியில் 13-18 என்று பின்தங்கி இருந்த பெங்களூரு அணி பிற்பாதியில் எழுச்சி பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்பியது. கேப்டன் பவன் செராவத் 11 புள்ளிகள் திரட்டினார். 6-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 4 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டை என்று 23 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

 இன்றைய ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 7.30 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Next Story