கடினமான நேரங்களில் உறுதுணையாக இருந்த பெற்றோர் - தங்கம் வென்ற தங்க மங்கை நிகாத் ஜரீன் பேட்டி


கடினமான நேரங்களில் உறுதுணையாக இருந்த பெற்றோர் - தங்கம் வென்ற தங்க மங்கை நிகாத் ஜரீன் பேட்டி
x

12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது.

இஸ்தான்புல்,

12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை நிகத் ஸரீன் 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் கரோலின் டி அல்மிடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் பெண்களுக்கான 52 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜித்போங்கை வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்றார். முன்னதாக தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகாத் ஜரீன், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். தெலுங்கானாவை சேர்ந்த நிகாத் ஜரீன் 25, கடந்த 2019ல் தாய்லாந்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஐந்தாவது இந்திய வீராங்கனையானார் நிகாத் ஜரீன். முன்னதாக மேரி கோம், சரிதா தேவி (2006), லேகா (2006), ஜென்னி (2006) ஆகியோர் உலக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் கூறியதாவது:-

கடினமான நேரங்களில் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்ததால் தங்க வெல்ல முடிந்தது. 2 ஆண்டுகளில் எனது பலவீனங்களை சமாளிக்க போராடினேன். எனது காயம் என்னை பலப்படுத்தியது.என்னால் வெற்றி பெற முடியும் என்பதில் உறுதியாக இருந்தேன் என்றார்.


Next Story