டென்னிஸ் துளிகள்


டென்னிஸ் துளிகள்
x
தினத்தந்தி 23 Sep 2017 11:00 PM GMT (Updated: 23 Sep 2017 6:59 PM GMT)

சியோலில் நடந்து வரும் கொரியா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான லாத்வியா வீராங்கனை

ஆஸ்டாபென்கோ போராடி வெற்றி

ஜெலினா ஆஸ்டாபென்கோ, தாய்லாந்தின் லக்சிகாவுக்கு பந்தை ஆக்ரோஷமாக திருப்பி அடித்த காட்சி. இதில் ஆஸ்டாபென்கோ 3-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஐ.டி.எப். டென்னிஸ்: இந்திய வீரர் சசிகுமார் ‘சாம்பியன்’

கோவையில் நடந்த ஐ.டி.எப். பியூச்சர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சசிகுமார் முகுந்த் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவர் அர்ஜூன் காதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சென்னையில் பிறந்தவரான உலக தரவரிசையில் 501-வது இடம் வகிக்கும் 20 வயதான சசிகுமாருக்கு இது 5-வது ஐ.டி.எப். பட்டமாகும்.

Next Story