பெட் கோப்பை டென்னிஸ்: இந்திய அணிக்கு முதல் வெற்றி


பெட் கோப்பை டென்னிஸ்: இந்திய அணிக்கு முதல் வெற்றி
x
தினத்தந்தி 9 Feb 2018 8:30 PM GMT (Updated: 9 Feb 2018 7:36 PM GMT)

பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய–ஓசியானா குரூப்–1 சுற்று ஆட்டம் டெல்லியில் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய–ஓசியானா குரூப்–1 சுற்று ஆட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதில் ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் கர்மான் கவுர் 6–3, 6–4 என்ற நேர்செட்டில் எடிசி ஷோங்கையும் (ஹாங்காங்), அங்கிதா ரெய்னா 6–3, 6–2 என்ற நேர்செட்டில் லின் ஷாங்கையும் (ஹாங்காங்) தோற்கடித்தனர். இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் பிரார்த்தனா தோம்பரே–பிரான்ஜலா யட்லாபாலி ஜோடி 6–2, 6–4 என்ற நேர்செட்டில் வான் யாய்–ஷிங் ஹூ வு இணையை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் ஹாங்காங்கை தோற்கடித்து முதல் வெற்றியை ருசித்தது. இந்திய அணி இன்று நடைபெறும் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் கடைசி இடம் பிடித்த சீனதைபே அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி குரூப்–1–ல் நீடிக்கும். தோல்வி பெறும் அணி குரூப்–2–க்கு தள்ளப்படும்.


Next Story