சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் யுகி பாம்ப்ரி கால்இறுதிக்கு தகுதி


சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் யுகி பாம்ப்ரி கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 14 Feb 2018 8:45 PM GMT (Updated: 14 Feb 2018 8:42 PM GMT)

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 3–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 6–2, 6–3 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் சித்தார்த் ரவாத்தை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்ப்சன் 6–3, 6–2 என்ற நேர்செட்டில் விஷ்யா தோங்‌ஷரேன்சைகுலை (தாய்லாந்து) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் எகிப்து வீரர் முகமது சப்வாத் 6–4, 6–2 என்ற நேர்செட்டில் இந்திய வீரர் அர்ஜூன் காதேவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் டானிலா பெட்ரோவிச் (செர்பியா), பெட்ரோ மார்ட்டினஸ் (ஸ்பெயின்), அன்டோய்ன் எஸ்கோபியர் (பிரான்ஸ்), டுக் ஹீ லீ (தென்கொரியா), யசுதகா உஷியமா (ஜப்பான்) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.

இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் ஜோடி 7–5, 6–3 என்ற நேர்செட்டில் அலெஸ்சான்ட்ரோ பெகா (இத்தாலி)–கிம்மெர் (பெல்ஜியம்) இணையை தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அரைஇறுதியில் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் ஜோடி, சகெத் மைனெனி (இந்தியா)–லூகா மார்காரோலி (சுவிட்சர்லாந்து) இணையைச் சந்திக்கிறது.


Next Story