சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: அரைஇறுதியில் யுகி பாம்ப்ரி


சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: அரைஇறுதியில் யுகி பாம்ப்ரி
x
தினத்தந்தி 15 Feb 2018 9:00 PM GMT (Updated: 15 Feb 2018 8:54 PM GMT)

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு கால்இறுதியில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 5–7, 6–2, 6–4 என்ற செட் கணக்கில் யசுதகா உஷியமாவை (ஜப்பான்) வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார்.

இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் ஜோடி 6–3, 7–5 என்ற நேர்செட்டில் சகெத் மைனெனி (இந்தியா)–லூகா மார்காரோலி (சுவிட்சர்லாந்து) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜி–விஷ்ணுவர்தன் இணை, செம் இல்கெல் (துருக்கி)–டானிலோ பெட்ரோவிச் (செர்பியா) ஜோடியை சந்திக்கிறது.


Next Story