மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால்


மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால்
x
தினத்தந்தி 20 April 2018 10:30 PM GMT (Updated: 20 April 2018 9:54 PM GMT)

மான்ட்கார்லோ டென்னிஸ் போட்டியில் அரைஇறுதியில் நடால் வெற்றி பெற்றார்.

மான்ட்கார்லோ,

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். இரட்டையர் கால்இறுதியில் ரோகன் போபண்ணா (இந்தியா)- ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் கபால்-ரோபர்ட் பாரா (கொலம்பியா) இணையை தோற்கடித்து அரைஇறுதியை எட்டியது.

Next Story