பார்சிலோனா ஓபன் டென்னிஸ் : 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நடால்


பார்சிலோனா ஓபன் டென்னிஸ் : 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்  நடால்
x
தினத்தந்தி 30 April 2018 1:10 AM GMT (Updated: 30 April 2018 1:10 AM GMT)

பார்சிலோனா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில், நம்பர் 1 வீரர் ரபேல் நடால் 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். #Nadal #Barcelonatitle

பார்சிலோனா, 

ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–4, 6–0 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் டேவிட்கோபினை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 

பின்னா் இறுதிப் போட்டியில் கிரேக்க நாட்டை சேர்ந்த 19வயது இளம் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாசுடன் (63வது ரேங்க்) நேற்று மோதிய நடால், சிட்சிபாசின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்து புள்ளிகளைக் குவித்தார். முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்ற அவர், அதே வேகத்துடன் 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்று பார்சிலோனா ஓபனில் 11வது முறையாக கோப்பையை மீண்டும் கைவசம் படுத்தினா்.

இந்த ஆட்டம் சுமார் 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. களிமண் தரை மைதானங்களில் நடைபெறும் போட்டிகளில் முடிசூடா சக்ரவர்த்தியாகவே திகழும் நடால், இவ்வகை மைதானங்களில் தனது 401வது வெற்றியை பதிவு செய்தார் என்பது கூறிப்பிடதக்கது. 

Next Story