இந்தியா-பாகிஸ்தான் மோதல் சானியா மிர்சா சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற முடிவு


இந்தியா-பாகிஸ்தான் மோதல் சானியா மிர்சா சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற முடிவு
x
தினத்தந்தி 19 Sep 2018 10:27 AM GMT (Updated: 19 Sep 2018 10:27 AM GMT)

சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற டென்னிஸ் வீராங்கனையும் பாகிஸ்தான் கிரிக்கேட் வீரர் சோயிப் மாலிக்கின் மனைவியுமான சானியா முடிவெடுத்து உள்ளார்.

ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகமான எதிர்பார்ப்புக்குள்ளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நிலையில்  24 மணி நேரத்திற்கு முன்னால் சமூக வலைதளத்தில்  இருந்து வெளியேருவது நல்லது என சானியா குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் நடந்து வருவதால், டென்னிஸ் வீராங்கனை  சானியா மிர்சா சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற முடிவு  செய்துள்ளார். இந்த  முடிவை சானியா தனது டுவிட்டர் பக்கம் மூலம் தெரிவித்து உள்ளார்.



Next Story