ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி


ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 13 Oct 2018 9:30 PM GMT (Updated: 13 Oct 2018 8:18 PM GMT)

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

ஷாங்காய், 

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், 19–ம் நிலை வீரரான போர்னா கோரிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார். 1 மணி 13 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 4–6, 4–6 என்ற நேர்செட்டில் போர்னா கோரிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு அரைஇறுதியில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள ஜோகோவிச் (செர்பியா) 6–2, 6–1 என்ற நேர்செட்டில் 5–ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஜோகோவிச் தொடர்ச்சியாக பெற்ற 17–வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் உலக தரவரிசையில் 2–வது இடத்துக்கு முன்னேறுகிறார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்–போர்னா கோரிச் ஆகியோர் மோதுகிறார்கள்.


Next Story