பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்லோனே ஸ்டீபன்சிடம் ஒசாகா தோல்வி


பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்லோனே ஸ்டீபன்சிடம் ஒசாகா தோல்வி
x
தினத்தந்தி 22 Oct 2018 10:34 PM GMT (Updated: 22 Oct 2018 10:34 PM GMT)

மொத்தம் ரூ.51 கோடி பரிசுத்தொகைக்கான பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

சிங்கப்பூர்,

 டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டியில் அவர்கள் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் நவோமி ஒசாகாவை (ஜப்பான்) தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 24 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தினார்.

Next Story