உலக டூர் டென்னிஸ்: ரபெல் நடால் விலகல்


உலக டூர் டென்னிஸ்: ரபெல் நடால் விலகல்
x
தினத்தந்தி 7 Nov 2018 9:30 PM GMT (Updated: 7 Nov 2018 8:10 PM GMT)

உலக தரவரிசையில் டாப்–8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 11–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை நடக்கிறது.

லண்டன்,

உலக தரவரிசையில் டாப்–8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 11–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்த 2–ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) விலகுவதாக அறிவித்துள்ளார். வலது கால் முட்டியில் அடைந்த காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அவருக்கு பதிலாக அமெரிக்காவின் ஜான் இஸ்னர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். நடால் விலகி இருப்பதன் மூலம் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆண்டின் கடைசியில் ‘நம்பர் ஒன்’ இடம் வகிப்பது உறுதியாகியுள்ளது.


Next Story