டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இத்தாலியிடம் வீழ்ந்தது இந்தியா


டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இத்தாலியிடம் வீழ்ந்தது இந்தியா
x
தினத்தந்தி 2 Feb 2019 10:26 PM GMT (Updated: 2 Feb 2019 10:26 PM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இத்தாலியிடம் இந்தியா அணி தோல்வி அடைந்தது.

கொல்கத்தா,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா-இத்தாலி அணிகள் மோதிய ஆட்டம் கொல்கத்தாவில் நடந்தது. முதல் நாளில் நடந்த இரண்டு ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகியோர் தோல்வி கண்டனர். இதனால் இத்தாலி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் (இந்தியா) ஜோடி 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சிமோன் போலேலி- பெர்ரெட்டினி (இத்தாலி) இணையை வீழ்த்தியது. அடுத்து நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஆன்ட்ரியாஸ் செப்பி 6-1, 6-4 என்ற நேர்செட்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனை சாய்த்தார். இதன் மூலம் இத்தாலி அணி 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி மாட்ரிட்டில் நவம்பர் மாதம் நடைபெறும் பிரதான சுற்றுக்கு முன்னேறியது. பிரதான சுற்று வாய்ப்பை இழந்த இந்திய அணி அடுத்து ஆசிய மண்டல போட்டியில் விளையாடும்.

Next Story