மாட்ரிட் ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி


மாட்ரிட் ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 9 May 2019 9:30 PM GMT (Updated: 9 May 2019 8:20 PM GMT)

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.

மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6–3, 2–6, 5–7 என்ற செட் கணக்கில் 18–ம் நிலை வீராங்கனையான பெலின்டா பென்சிச்சிடம் (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) 7–5, 7–5 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6–1, 7–6 (7–2) என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஜெர்மை ஷார்டியை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் மரின் சிலிச் (குரோஷியா), டோமினிக் திம் (ஆஸ்திரியா) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தனர். ஸ்பெயினை சேர்ந்த 37 வயதான டேவிட் பெரர் தனது 2–வது சுற்று ஆட்டத்தில் 4–6, 1–6 என்ற நேர்செட்டில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் தோல்வி கண்டார். போட்டிக்கு பிறகு டேவிட் பெரர் அளித்த பேட்டியில் இத்துடன் தனது டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவித்தார்.


Next Story