டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் தோல்வி


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் தோல்வி
x
தினத்தந்தி 16 Oct 2019 10:45 PM GMT (Updated: 16 Oct 2019 8:37 PM GMT)

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வியடைந்தார்.

ஒடென்சி, 

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், சயாகா தகாஹசியுடன் (ஜப்பான்) மோதினார். 37 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 15-21, 21-23 என்ற நேர் செட் கணக்கில் தோற்று வெளியேறினார். தகாஹசிக்கு எதிராக 6 முறை மோதியுள்ள சாய்னா அதில் சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா (இந்தியா) 21-11, 21-11 என்ற நேர் செட் கணக்கில் கன்டா சுனியாமாவை (ஜப்பான்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதே சமயம் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் ஆன்டோசெனிடம் (டென்மார்க்) தோல்வியை தழுவினார்.

Next Story