டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் பெடரர் - ஜோகோவிச்சை வெளியேற்றினார்


டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் பெடரர் - ஜோகோவிச்சை வெளியேற்றினார்
x
தினத்தந்தி 15 Nov 2019 11:46 PM GMT (Updated: 15 Nov 2019 11:46 PM GMT)

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரைஇறுதிக்கு பெடரர் தகுதிபெற்றார்.

லண்டன்,

டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘போர்க்’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) தோற்கடித்தார். 2-வது வெற்றியை ருசித்த பெடரர் 16-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த பிரிவில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் ஜோகோவிச் வெளியேறினார்.

‘அகாசி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-7 (4-7), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் சிட்சிபாசை (கிரீஸ்) வீழ்த்தினார். அத்துடன் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் நடால் தக்க வைத்துக்கொண்டார். புதிய சீசன் தொடங்கும் வரை அவர் தான் நம்பர் ஒன் ஆவார். 2-வது வெற்றி பெற்ற நடாலுக்கு இந்த பிரிவில் கடைசி லீக்கின் முடிவை பொறுத்து அரைஇறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.


Next Story