மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதி


மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 6 Feb 2020 12:37 AM GMT (Updated: 6 Feb 2020 12:37 AM GMT)

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.

புனே,

3-வது மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சசிகுமார் முகுந்த் 2-6, 6-7 (7-9) என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் தாரோ டேனியலிடம் தோல்வி கண்டு வெளியேறினார். 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செக்குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி 7-6 (7-5), 6-4 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் சால்வடோர் காருசோவை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி 7-6 (8-6), 6-3 என்ற நேர்செட்டில் சுமித் நாகல் (இந்தியா)-இகோர் ஜெராசிமோவ் (பெலாரஸ்) இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

Next Story