மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர்கள் பெயஸ், குணேஸ்வரன் தோல்வி


மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர்கள் பெயஸ், குணேஸ்வரன் தோல்வி
x
தினத்தந்தி 6 Feb 2020 11:55 PM GMT (Updated: 6 Feb 2020 11:55 PM GMT)

தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது.

புனே,

 இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சூன் வோ கிவோனை (தென்கொரியா) சந்தித்தார். 1 மணி 43 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் குணேஸ்வரன் 3-6, 6-7 (5) என்ற நேர் செட்டில் தோற்று வெளியேறினார். குணேஸ்வரனின் தோல்வியின் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. பட்டம் வெல்லும் வாய்ப்பில் இருந்த 19-ம் நிலை வீரரும், போட்டித்தரநிலையில் முதலிடம் பெற்றவருமான பெனோய்ட் பேர் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை தரவரிசையில் 174-வது இடம் வகிக்கும் தகுதிநிலை வீரர் ராபர்ட்டோ மார்கோரா (இத்தாலி) 6-4, 6-4 என்ற நேர் செட்டில் சாய்த்தார்.

இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ராம்குமார்-புராவ் ராஜா ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட்டில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)- மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) இணையை ஊதித்தள்ளியது. பெயஸ், உள்நாட்டில் விளையாடிய கடைசி சர்வதேச போட்டி இதுவாகும்.

Next Story