டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி தோல்வி


டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி தோல்வி
x
தினத்தந்தி 9 March 2020 1:27 AM GMT (Updated: 9 March 2020 1:27 AM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில்இந்திய அணி தோல்வி அடைந்தது.

ஜாக்ரெப், 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-குரோஷியா இடையிலான ஆட்டம் ஜாக்ரெப் நகரில் நடந்தது. இதில் ஒற்றையர் ஆட்டங்களில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்தனர். இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- ரோகன் போண்ணா ஜோடி போராடி வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் குரோஷியாவின் மரின் சிலிச் 6-0, 6-1 என்ற நேர் செட்டில் இந்திய வீரர் சுமித் நாகலை ஊதித்தள்ளினார். இதனால் குரோஷியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதால் கடைசி ஆட்டம் தேவையில்லாமல் போனது. இந்த வெற்றியின் மூலம் குரோஷியா டேவிஸ் கோப்பை பிரதான சுற்றுக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்து உலக குரூப்1 சுற்றில் விளையாடும்.

Next Story