மீண்டும் பயிற்சியை தொடங்கிய ரபேல் நடால்


மீண்டும் பயிற்சியை தொடங்கிய ரபேல் நடால்
x
தினத்தந்தி 27 May 2020 8:44 AM GMT (Updated: 27 May 2020 8:44 AM GMT)

பிரபல டென்னீஸ் வீரர் ரபேல் நடால் தனது பயிற்சியை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

சிட்னி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பயிற்சியை மீண்டும் ஆரம்பித்துள்ளார் பிரபல வீரர் ரபேல் நடால்.

தான் பயிற்சி பெறும் வீடியோவை வெளியிட்டு நடால் கூறியதாவது:

ஆடுகளத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். மீண்டும் பயிற்சியைத் தொடங்கியதற்கு மகிழ்ச்சி. ரபேல் நடால் அகடாமியில் மீண்டும் பயிற்சியைத் தொடங்கியதில் அதன் மாணவர்களும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். அதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

Next Story