காயத்துக்கு மீண்டும் ஆபரேஷன்: இந்த ஆண்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து பெடரர் விலகல்


காயத்துக்கு மீண்டும் ஆபரேஷன்: இந்த ஆண்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து பெடரர் விலகல்
x
தினத்தந்தி 11 Jun 2020 12:06 AM GMT (Updated: 11 Jun 2020 12:06 AM GMT)

காயத்துக்கு மீண்டும் ஆபரேஷன் நடைபெற்றதால், இந்த ஆண்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து பெடரர் விலகி உள்ளார்.

பாரீஸ், 

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரரும், உலக தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான ரோஜர் பெடரருக்கு கடந்த பிப்ரவரி மாதம் வலது கால்முட்டி காயத்துக்கு சிறிய அளவில் ஆபரேஷன் நடந்தது. இந்த நிலையில் மறுபடியும் அதே முட்டியில் பிரச்சினை ஏற்பட்டதால் 2-வது முறையாக ஓரிரு வாரங்களுக்கு முன்பு ஆபரேஷன் செய்யப்பட்டது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து புத்துணர்ச்சியுடன் களம் திரும்ப முடிவு எடுத்துள்ள பெடரர் இந்த சீசனில் எஞ்சிய போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். 2021-ம் ஆண்டு சீசனை எதிர்நோக்கி இருப்பதாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான 38 வயதான பெடரர், அமெரிக்க ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட போட்டிகளை தவற விடுகிறார்.

Next Story