ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டனர்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Jan 2021 11:08 PM GMT (Updated: 17 Jan 2021 11:08 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ள 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் 8-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க வரும் வீரர், வீராங்கனைகள் 2 வாரங்கள் பயிற்சியோடு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் வீரர், வீராங்கனைகள் வந்த விமானங்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஓட்டலிலேயே அடைப்பட்டு கிடக்கிறார்கள். 14 நாட்கள் இவர்கள் தங்களது அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story