ஆஸ்திரேலியாவில் கடுமையான கோவிட் -19 நெறிமுறைகள் கடைபிடிப்பு: ரபேல் நடால் ஆதரவு


ஆஸ்திரேலியாவில் கடுமையான கோவிட் -19 நெறிமுறைகள் கடைபிடிப்பு: ரபேல் நடால் ஆதரவு
x
தினத்தந்தி 27 Jan 2021 7:36 AM GMT (Updated: 27 Jan 2021 7:36 AM GMT)

ஆஸ்திரேலியாவில் கடுமையான கோவிட் -19 நெறிமுறைகள் அரசின் கடைபிடிப்புக்கு டென்னீஸ் வீரர் ரபேல் நடால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சிட்னி

ஓவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு 3 கிராண்ட்சிலாம் போட்டிகள் மட்டுமே நடந்தது. ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் (செர்பியா), சோபியா (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர். தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட அமெரிக்க ஓபனில் டொமினிக் தீம் (ஆஸ்தீரியா), நவோமி ஒசாகா (ஜப்பான்) பிரெஞ்சு ஓபனில் ரபெல்நடால் (ஸ்பெயின்), இகா சுவாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் பெற்றனர்.

2021-ம் ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் பிப்ரவரி 8 ந்தேதி முதல் 21 ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும், அங்கு 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. 

இந்தநிலையில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரை முன்னிட்டு அரசு எடுக்கும் கோவிட் -19க்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தாம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- 

ஆஸ்திரேலியாவுக்கு வரும் அனைத்து வீரர்களும் தங்களுடன் வரும் ஊழியர்களுடன் இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது வழக்கத்தை விட வித்தியாசமான சூழ்நிலை, இது அனைவருக்கும் மிகவும் வருத்தமாக உள்ளது.  ஆஸ்திரேலியாவிற்கு வந்து இருந்த 72 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.  தனிமையில் இருக்கும் வீரர்களுக்கு தாம் மிகவும் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Next Story