பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் சுமித் நாகல் தோல்வி


பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் சுமித் நாகல் தோல்வி
x
தினத்தந்தி 28 May 2021 12:00 AM GMT (Updated: 28 May 2021 12:00 AM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதி சுற்று பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல் 3-6, 3-6 என்ற நேர் செட்டில் அலெஜான்ட்ரோ தபிலோவிடம் (சிலி) தோல்வியை தழுவினார். ஏற்கனவே அங்கிதா ரெய்னா, ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகியோரும் வெளியேறிய நிலையில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. வருகிற 30-ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் பிரதான சுற்றில் இரட்டையர் பிரிவில் இ்ந்தியா சார்பில் ரோகன் போபண்ணா, திவிஜ் சரண், அங்கிதா ரெய்னா ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.


Next Story