ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டி - உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன்


ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டி - உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன்
x
தினத்தந்தி 27 Jun 2021 12:39 AM GMT (Updated: 27 Jun 2021 12:39 AM GMT)

ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன் பட்டம் வென்றார்.

பெர்லின்,

ஜெர்மனியில் நடைபெற்ற பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன் ஆனாா். கடந்த 3 ஆண்டுகளில் இது அவரது முதல் டபிள்யூடிஏ பட்டமாகும். இறுதிச்சுற்றில் செக் குடியரசின் காடெரினா சினியாகோவாவை எதிா்கொண்ட கொபா் 6-3, 6-2 என்ற நோ செட்களில் வெற்றி பெற்றாா்.

கடந்த 2018 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி தனது 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தாா் கெர்பா். அதன் பிறகு 2019-இல் இரு போட்டிகளில் பங்கேற்று இறுதி ஆட்டம் வரை வந்து தோற்றாா். இந்த நிலையில் தற்போது டென்னிஸ் வரலாற்றில் 13-ஆவது பட்டத்தை வென்றுள்ளாா்.

கிராஸ் கோா்ட் போட்டிகளில் கொபா் சாம்பியன் ஆகியிருப்பது இது 3-ஆவது முறை ஆகும். கடந்த 2015-இல் பிா்மிங்ஹாம் போட்டியிலும், 2018-இல் விம்பிள்டனிலும் வெற்றி பெற்ற ஏஞ்செலிக் கெர்பா், தற்போது பேட் ஹாம்பா்கில் சாம்பியன் ஆகியிருக்கிறாா்.

Next Story