விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி


விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 8 July 2021 5:25 AM GMT (Updated: 8 July 2021 5:25 AM GMT)

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் மார்டோன் புக்சோவிக்சை (ஹங்கேரி) வீழ்த்தி 10-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இதே போல் டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) 6-4, 3-6, 5-7, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் கரென் கச்சனோவை (ரஷியா) விரட்டி கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக அரைஇறுதியை எட்டினார். ஷபோவலோவ் அடுத்து ஜோகோவிச்சுடன் மோத உள்ளார். மற்றொரு கால்இறதியில் 8 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3-6, 6-7 (4-7), 0-6 என்ற நேர் செட் கணக்கில் ஹர்காக்சிடம் (போலந்து) அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவின் 3-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி 3-6, 6-3, 9-11 என்ற செட் கணக்கில் ஆந்த்ரேஜா கிலெபக் (சுலோவேனியா)- ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து) இணையிடம் போராடி வீழ்ந்தது.


Next Story