விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டி- பிளிஸ்கோவா


விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டி- பிளிஸ்கோவா
x
தினத்தந்தி 9 July 2021 3:45 AM GMT (Updated: 9 July 2021 3:45 AM GMT)

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டினார்.

2-வது செட்டில் 2-5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த ஆஷ்லி பார்ட்டி அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு டைபிரேக்கர் வரை போராடி வெற்றியை தன்வசப்படுத்தினார். ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் விம்பிள்டனில் இறுதிசுற்றை எட்டுவது 1980-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 13-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீராங்கனை சபலென்காவை (பெலாரஸ்) போராடி விரட்டி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை நடக்கும் மகுடத்துக்கான ஆட்டத்தில் ஆஷ்லி பார்ட்டி-பிளிஸ்கோவா மோதுகிறார்கள்.

Next Story