அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடப் போவது இல்லை என ரபேல் நடால் அறிவிப்பு


அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடப் போவது இல்லை என ரபேல் நடால் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2021 11:52 AM GMT (Updated: 20 Aug 2021 11:52 AM GMT)

முன்னணி வீரர்களான ரபேல் நடால் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியிருப்பது டென்னிஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில்  இருந்து முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் விலகுவதாக அறிவித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021-ம் ஷெஷனை  முடித்துக்கொள்வதாக நடால் அறிவித்துள்ளார்.  “காலில் ஏற்பட்ட காயத்தால் ஒரு வருடமாக அவதிப்படுகிறேன். இதற்குத் தீர்வு காண எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது” என ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அண்மையில் அறிவித்து இருந்த நிலையில், தற்போது ரபேல் நடாலும் அறிவித்துள்ளார். 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும்  30 ஆம் தேதி தொடங்கி  செப்டம்பர் 12 வரை நடைபெறவுள்ளது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டித்தொடரில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் அறிவித்துள்ளார்.


Next Story