டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பின்லாந்து அணியிடம் இந்தியா தோல்வி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பின்லாந்து அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.
எஸ்போ,
டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக ‘குரூப்1’ பிரிவில் இந்தியா-பின்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் பின்லாந்தில் உள்ள எஸ்போ நகரில் 2 நாட்கள் நடந்தது. முதல் நாளில் நடந்த ஒற்றையர் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் இருவரும் தோல்வி அடைந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ராம்குமார் இணை, பின்லாந்தின் ஹாரி ஹெலிவாரா-ஹென்றி கோன்டினென் ஜோடியை சந்தித்தது. இதில் வெற்றி பெற்றால் தான் போட்டியில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் களம் கண்ட போபண்ணா-ராம்குமார் ஜோடி 6-7 (2-7), 6-7 (2-7) என்ற நேர்செட்டில் போராடி வீழ்ந்தது. இதன் பின்னர் சம்பிரதாயத்துக்காக நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் பின்லாந்தின் பாட்ரிக் நிக்லாசை வீழ்த்தி ஆறுதல் அளித்தார். அவசியம் இல்லாததால் 5-வது ஆட்டம் நடக்கவில்லை.
முடிவில் 1-3 என்ற கணக்கில் இந்த போட்டியை இழந்த இந்திய அணி இனி அடுத்த ஆண்டு பிளே-ஆப் சுற்றில் விளையாடும்.
Related Tags :
Next Story