ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறியது சானியா-ஷுவாய் ஜோடி


ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறியது சானியா-ஷுவாய் ஜோடி
x
தினத்தந்தி 22 Sep 2021 12:22 PM GMT (Updated: 22 Sep 2021 12:22 PM GMT)

சானியா-ஷுவாய் ஜோடி கிரேட் பிரிட்டனின் தாரா மூர் மற்றும் பெக்டாஸ் ஜோடியை 6-7, 7-5, 10-7 என்ற கணக்கில் வீழ்த்தினர்

செக் குடியரசு

ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ்  போட்டிகள் செக் குடியரசு நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது .இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தின்  முந்தய சுற்றில்  இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி  களமிறங்கினர் . 

இவர்கள்   கிரேட் பிரிட்டனின் தாரா மூர் மற்றும் பெக்டாஸ் ஜோடியை  6-7, 7-5, 10-7 என்ற கணக்கில்  வீழ்த்தினர் . இதன் மூலம் நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்துக்கு சானியா, ஷுவாய் ஜோடி தகுதி பெற்றனர் . இவர்கள் காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் அன்னா டானிலினா மற்றும் பெலாரஸின் லிட்சியா மரோசாவா  எதிர்கொள்ள உள்ளனர் .

Next Story