ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ்: சானியா-ஷுவாய் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது
சானியா-ஷுவாய் ஜோடி கஜகஸ்தானின் அன்னா டானிலினா மற்றும் பெலாரஸின் லிட்சியா மரோசாவா ஜோடியை 6-3, 3-6, 10-6 என்ற கணக்கில் வீழ்த்தினர்
செக் குடியரசு
ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் போட்டிகள் செக் குடியரசு நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது .இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி களமிறங்கினர் .
சானியா-ஷுவாய் ஜோடி கஜகஸ்தானின் அன்னா டானிலினா மற்றும் பெலாரஸின் லிட்சியா மரோசாவா ஜோடியை 6-3, 3-6, 10-6 என்ற கணக்கில் வீழ்த்தினர் . இதன் மூலம் நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்துக்கு சானியா, ஷுவாய் ஜோடி தகுதி பெற்றனர் .
நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் சானியா-ஷுவாய் ஜோடி ஜப்பானின் ஹோசுமி -நினோமியா ஜோடியை எதிர்கொள்ள உள்ளது.
Related Tags :
Next Story