கோர்மாயூர் டென்னிஸ் பெண்கள் ஓபன் :இன்று களமிறங்கிறார் அங்கீதா ரெய்னா


கோர்மாயூர் டென்னிஸ் பெண்கள் ஓபன் :இன்று களமிறங்கிறார் அங்கீதா ரெய்னா
x
தினத்தந்தி 25 Oct 2021 12:36 PM GMT (Updated: 25 Oct 2021 12:36 PM GMT)

டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் 194 வது இடத்தில் இருக்கும் அங்கீதா ரெய்னா முதல் முறையாக அலிசன் ரிஸ்க்கேவுடன் இன்று மோதவுள்ளார்

இத்தாலி 

கோர்மாயூர்  டென்னிஸ் பெண்கள் ஓபன் இத்தாலியின் கோர்மாயூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் தகுதி சுற்று போட்டிகள் நேற்று முடிவடைந்தது. நேற்று முன் தினம் நடந்த  தகுதி சுற்று போட்டியில் இந்தியாவின்  அங்கீதா ரெய்னா டச்சு வீராங்கனை ரோசாலி வான் டெரை 6-2 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி லீக் போட்டிக்குள் நுழைந்தார்.

இந்த நிலையில் தனது ரவுண்டு ஆப் 32 சுற்றில் இன்று களமிறங்குகிறார் இந்தியாவின்  அங்கீதா ரெய்னா.
இந்த போட்டியில் அவர் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்க்கேவுடன் மோதுகிறார். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர் காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் 194 வது இடத்தில்  இருக்கும் அங்கீதா ரெய்னா முதல் முறையாக அலிசன் ரிஸ்க்கேவுடன் இன்று மோதவுள்ளார். அலிசன் ரிஸ்க்கே , பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் 50 வது இடத்தில இருப்பது குறிப்பிடத்தக்கது.

அங்கீதா ரெய்னா-அலிசன் ரிஸ்க்கே இடையிலான இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story