திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது நடக்கிறது-தேசிய விருது நடிகை

திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது நடக்கிறது என தேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ் கூறினார். #CastingCouch

Update: 2018-04-25 12:22 GMT

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து  நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர். தெலுங்கு திரையுலகில் ஸ்ரீ ரெட்டி பெரும் புயலையே கிளப்பிக் கொண்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பல முன்னாள் நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூட இந்த விவகாரம் ஆந்திர சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் பிரபலமான நடன இயக்குனர் சரோஜ் கான் (69). அவர் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறு இல்லை. அவ்வாறு அழைப்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்  மேலும் ஒரு நடிகை  சினிமா வாய்ப்புக்காக சென்ற இடத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தனக்கு பாலியல் தொல்லையை கொடுத்ததாக தேசிய விருது பெற்ற நடிகை  தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து உள்ளது. அதில்  சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கிய நடிகை உஷா ஜாதவ் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசியுள்ளார். அந்த ஆவண படத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது சாதாரணமானது தான். ஒருமுறை ஒரு படத்தில் நடிப்பது தொடர்பாக சென்றிருந்தேன். பட வாய்ப்புக்கு பதிலுக்கு நீங்கள் ஏதாவது தர வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள் என்னிடம் பணம் இல்லையே என்றேன்? அதற்கு, பணம் வேண்டாம். தயாரிப்பாளர் அல்லது இயக்குனருடன் படுக்கையை பகிர வேண்டும் என என்னிடம் கூறினர். ஆனால், அந்த வாய்ப்பை நான் வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்” என அவர் கூறியுள்ளார்.

அதேபோல சினிமாவில் நடிக்கும் ஆசையில் கிராமத்தில் இருந்து மும்பைக்கு வந்த 25 வயது வளர்ந்து வரும் நடிகை ஒருவர் வாய்ப்பு தேடிச் சென்ற இடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அந்த பெண்க்கு ஒருமுறை மட்டுமல்ல பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களாம். அவர் வாய்ப்புக்காக சென்ற மற்றொரு இடத்தில் நடிகை செக்ஸ் வைத்துக் கொள்ள சந்தோஷப்பட வேண்டும் என காஸ்டிங் ஏஜென்ட் என்னிடம் தெரிவித்தார். 

காஸ்டிங் ஏஜென்ட் அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டு முத்தமிட்டார், எனது ஆடைக்குள் கையை விட்டார். பர்சனல் உறுப்பில் கைவைத்தார். இது வேண்டாம் நிறுத்துங்கள் என்று நான் சொன்னதற்கு சினிமாவில் இருக்க நீ சரிப்பட்டு வர மாட்ட என அந்த ஏஜென்ட் என்னிடம் தெரிவித்தார் என அந்த நடிகை கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்