உரிமை, கடமை, மடமை, கொடுமை - நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவு
உரிமை, கடமை, மடமை, கொடுமை குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். #actorVivekh
சென்னை,
காவிரி விவகாரம் தொடர்பாக, நடிகர் விவேக் அடுக்கு மொழியில் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார் அதில், நாங்கள் கேட்பது நீரப்பா, நீங்கள் தருவதோ சூரப்பா, அண்ணன் தம்பிகள் நாமப்பா.. நம்மை பிரிப்பது நீராப்பா? அப்பப்பப்பா போதும்பா.. அன்னைக் காவிரி வேணும்பா.. என பதிவிட்டு இருந்தார். இவரது கருத்திற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் கூறியிருப்பதாவது:
காவிரி நீர் பெறுதல் நம் உரிமை; ஆனால் உள் நாட்டு ஆறுகளை மீட்டெடுப்பதும் நம் கடமை.மரங்களை வெட்டியதும், ஏரி குளம் தூர் வாராததும் நம் மடமை. எங்கு காணினும் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கொடுமையிலும் கொடுமை என பதிவிட்டுள்ளார்.
காவிரி நீர் பெறுதல் நம் உரிமை; ஆனால் உள் நாட்டு ஆறுகளை மீட்டெடுப்பதும் நம் கடமை.மரங்களை வெட்டியதும், ஏரி குளம் தூர் வாராததும் நம் மடமை. எங்கு காணினும் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கொடுமையிலும் கொடுமை😪 @ThanthiTV@PTTVOnlineNews@polimernews@bbctamil@news7tamil
— Vivekh actor (@Actor_Vivek) April 28, 2018