இளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தினார். #Rajinikanth

Update: 2018-05-13 06:17 GMT
சென்னை,

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞரணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கோவையில் மாநாடு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். இந்நிலையில், இன்று போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இளைஞரணி செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் 33 பேர் பங்கேற்றனர். இதில் இளைஞர் அணியினர் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் எனவும்  ஒழுக்கமாக இருந்தால், மக்கள் மன்றத்தில் பொதுமக்கள் இணைவார்கள் எனவும் ரஜினி அறிவுறுத்தியதாக நீலகிரி மாவட்ட இளைஞரணி செயலாளர் டேனியல் கூறினார்.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்சனைகள், அதற்கான தீர்வு குறித்து இளைஞரணி செயலாளர்களிடம் ரஜினி கேட்டறிந்ததாகவும், விரைவில் மகளிர் அணியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்